உடலைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் மறுத்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பதைத் தவிர நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை என்று நீதிபதி அமர்வு கூறியது.
காவல்துறையினரால் காவலில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த 26 வயதான ஆகாஷ் டெலிசனின் உடலை , அரசு ராஜாஜி மருத்துவமனையின் சவக்கிடங்கிலிருந்து அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள மறுத்ததைக் கருத்தில் கொண்டு, அவரது உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை செவ்வாயன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
