ஜெய்ப்பூர்: (மே 9) கோட்டாவில் உள்ள நியூ மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு பிரசவப் பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மருத்துவப் பணியாளர்கள் மீது ராஜஸ்தான் அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ஒரு மூத்த மருத்துவர் மற்றும் இரண்டு செவிலியர் பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் ஒப்பந்த அடிப்படையிலான (UTB) மருத்துவர் ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு மருத்துவர்களுக்கும் விளக்கம் கோரும் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து நியாயமான மற்றும் காலவரையறைக்குட்பட்ட விசாரணை நடத்த முதலமைச்சர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
